அன்பிற்கு நாம் காட்டும் அடையாளம்.!!

Protect your loved ones.. ! அன்பிற்கு நாம் காட்டும் அடையாளம்.!!

புகையிலையின்  புகை, மற்றவர்களுக்கு பகை(தீமை) என்பது அறிந்ததே -
ஆனால் புகையிலை என்பது ,

 "கருவுக்குள் இருக்கும் குழந்தைக்கும் கண்ணுக்கு புலப்படாத கரையான் " ஆகிறது.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ள தகப்பனால் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய  தூய்மையான காற்றில் நிகோடின் கலந்து விடுகிறது,
புகை பிடித்த இடத்தில அதன் தாக்கம் இரண்டரை மணி நேரம் சுற்றுவதால் ,சுற்றி இருப்பவர்கள் பாதிக்க படுவது வருந்த தக்கது.
குழந்தைக்கு அருகில்(பெற்றோர்) புகை பிடிபதால் ,குழந்தையின் நுரையீரலில் வடிகட்டபடாத புகை துகள்கள் நீண்ட நாள் தங்கி விடும். இதன் பாதிப்பு ஒரு வருடத்திற்கு 60 முதல் 150 சிகரட் பிடிக்கும் நிகோடின் அளவு உள்ளே சென்றிருக்கும் என்பது ஆதார பூர்வ உண்மை.
புகையிலையின் புகையில் 7000 ஆபாத்தான இராசயினம் உள்ளது , அதில் 250 இரசியனங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் புகைப்பவர் ஒருவரென்றல் பாதிப்பவர் பலர் என்பதை நம் சிந்தனைக்கு கொண்டு வருவோம்.
பெற்றோகளின்  இச்செயலால் குழந்தைக்கு உடலளவு ஏற்படும் பாதிப்புகள் பெற்றோரே  அறியாமல்  இருக்கும் அவலம் நீங்க வேண்டும்.
ஒரு குழந்தையை இந்த சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் போது அதன் உடலும் , மனமும் , சிந்தனையும் ஆரோக்கியமானதாக உருவாகுவது சமுதாய கடமை.

"கொள்ளை அழகு என்று குழந்தைகளை கொஞ்சும் போது புகையிலையால் கொள்ளை போகிறது நம் குழந்தையின்  உடல்நலம்  என்ற உண்மையை நம் மனம் உணர வேண்டும் ."

புகை பிடிக்கும் பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் :
1 . நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் அழற்சி , நிமோனியா
2.  Otitis media என்று கூறப்படும் காது சம்மந்தப்பட்ட நோய்கள்
3. நுரையீரல் செயல்பாட்டில் குறைபாடுகள்
4. ஆஸ்துமா தாக்குதல்கள்
5. சராசரி வயதினரை விட உயரம் குறைவாக இருத்தல்

"அன்பானவர்களை  அருகில் இருந்து அரவணைக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு நாம் அறியாமல் கூட ஆபத்தை ஏற்படுத்தாமல் இருப்பது  நம் அன்பிற்கு நாம் காட்டும் அடையாளம்.!!"

Comments

Popular posts from this blog

FIRST MEET - A TAMIL MATRIMONY COURTESY

Charu's Labour and the Little Princess

Rekindling Love and Life